மறுபடியும் பிறந்தவன் - Jokes
குடிகார கந்தசாமியை மூன்று முறை தண்ணீரில் அமுக்கி எடுத்துக் கொண்டு போதகர் கூறினார்.
"உன்னுடைய பாவங்களெல்லாம் கழுவி மாற்றப்பட்டது.இன்று நீ புதிதாக சுத்தமானவனாக பிறந்திருக்கிறாய்.இன்றுமுதல் நீ சாமுவேல் என்றழைக்கப்படுவாய்.
இனிமேல் குடிக்கமாட்டேன் என சத்தியம் செய்துகொடு சாமுவேலே ".
சத்தியம். டீ குடிக்கலாமா பாஸ்ரர்.???
எப்படி கணிப்பு - jokes
தாராளமா எத்தனை தடவ வேணும்னாலும் குடிக்கலாம்.
ஓகே பாஸ்ரர்.
சாமுவேலான குடிகார கந்தசாமி தனது வீட்டிற்கு வந்தவுடன் அலமாரியில் இருந்து ஒரு புல் பாட்டில் ரம் எடுத்து தொட்டி நிறைய இருந்த தண்ணீருக்குள் மூன்றுமுறை அமுக்கி எடுத்துக்கொண்டு கூறினான்.
" உன்னுடைய விஷங்களெல்லாம் கழுவி மாற்றப்பட்டது.நீ புதிதாக சுத்தமானதாக பிறந்திருக்கிறாய். இன்றுமுதல் நீ " டீ " என்றழைக்கப்படுவாய்".
Comments
Post a Comment