பழிக்கு பழி வாங்காதிருப்பாயாக - Story



ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு சென்றது. வேடன் அருகில் இருந்த ஓர் மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது. 

புலி கரடியிடம் கூறியது  இவ்வேடன், நமது மிருக குலத்துக்கே பகைவன்; இவனைக் கீழே தள்ளி விடு என்றது. இருக்கலாம், ஆனால் இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். 

சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கியது. சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறியது எனக்கு பசியாக இருக்கிறது.  நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்.

கோபத்தின் விளைவுகள் - story

வேடன் கரடியைத் தள்ளிவிட்டான், கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது.

அப்போது புலி கரடியிடம் சொன்னது. இந்த மனிதன் நன்றிகெட்டவன் சரண் அடைந்தவனை காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான். அவனை இப்பொழுதே தள்ளிவிடு என்றது. 

அதற்கு கரடி சொன்னது, எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக, நான் என் நல்நடத்தையை கைவிடக் கூடாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி
வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது.

கருத்து - துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு. நல்ல மனிதர்கள், நல்ல ஒழுக்கமான குணம் உள்ளவர்கள் அப்படிப் பழி வாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், எந்த சூழ்நிலையிலும் எதற்காகவும், தங்களுடைய ஒழுக்கமான குணத்தை மாற்றி கொள்ள மாட்டார்கள்.

ரோமர் 12:17  ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; 

Comments

Popular posts from this blog

ஆண்டவரும் சாத்தானும் - Jokes