ஆண்டவரும் சாத்தானும் - Jokes

  


இரண்டு திருடர்கள் ஒரு கூடை நிறைய தோடம்பழங்களை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்கள். ஒரு அமைதியான இடத்துக்கு போய் இரண்டு பேரும் அதை பங்கு போட நினைத்தார்கள். 

பக்கத்தில் உள்ள சுடு காட்டிற்கு போவோம் என்று ஒருவன் சொன்னான். சுடுகாட்டின் கதவு பூட்டி இருந்தது கதவு ஏறி உள்ளே குதித்தார்கள்.அப்படி குதிக்கும் போது இரண்டு தோடம்பழம் கீழே விழுந்துவிட்டது. கூடையில் நிறைய பழங்கள் இருந்ததால் அதை அவர்கள் கவனிக்கவில்லை.

கொஞ்ச நேரம் கழிந்து சுடுகாடு வழியாக ஒரு குடிகாரன் வந்தான். அவன் உள்ளே இருந்து வந்த சத்தத்தை கேட்டு அங்கேயே நின்றுவிட்டான். 

"உனக்கொன்று, எனக்கொன்று, 
உனக்கொன்று,  எனக்கொன்று"

மறுபடியும் பிறந்தவன் - Jokes
எப்படிக் கணிப்பு - Jokes

இதை கேட்ட அவனுக்கு குடி போதை போய்விட்டது. அடிச்சுப் பிரண்டு  பக்கத்திலே உள்ள ஆலயத்துக்கு ஓடினான் அங்கு இருந்த பழைய விசுவாசியிடம் விடயத்தை சொன்னான். "சகோதரனே தயவு செய்து என் கூட வாருங்கள் கடவுளும்,  சாத்தானும் சுடுகாட்டில் பிணங்களை பங்கு போடுவதை காட்டுகிறேன்" என்றார்.

அந்த பழைய விசுவாசிக்கு ஒன்றும் புரியவில்லை , ஆனாலும் அவன் கேட்டதால் அவனுடன் போய் பார்க்க விரும்பி அவனுடன் போனார். சுடுகாட்டில்இருந்து சத்தம் வந்தது 

"உனக்கொன்று ,  எனக்கொன்று,
 உனக்கொன்று, எனக்கொன்று"
                 
திடீர்என்று சத்தம் நின்றுவிட்டது ஒருவன் சொன்னசத்தம் தெளிவாக கேட்டது "ஆமா கதவிலே இருக்குற இரண்டு யாருக்கு"

நாங்கள் இன்னும் சாகவில்லை, நாங்கள் இன்னும் சாகவில்லை என்று சொல்லிக்கொண்டு  அந்த பழைய விசுவாசியும் குடிகாரனும் விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள். 

Comments

Popular posts from this blog

பழிக்கு பழி வாங்காதிருப்பாயாக - Story