Posts

Showing posts from 2017

மகிழ்ச்சி - Bible verses

Image

இரண்டில் ஒன்றை தெரிவு செய்வோம் - Message Notes

Image
மத்தேயு 7ம் அதிகாரத்தில் ஆண்டவராகிய இயேசு நாம் இரண்டில் ஒன்றில் இருக்கின்றோம் என்பதை தெளிவு படுத்துகின்றார்.  👉🏿மத்தேயு - 7:13  இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ------இடுக்கமான வாசல்---- ------விசாலமான வாசல்----- 👉🏿மத்தேயு 7:17  அப்படியே நல்ல மரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும். --------நல்ல மரம்--------- --------கெட்ட மரம்-------- எதன் அடிப்படையில் எமது கிரியைகள்- Message Notes இரட்சிப்பின் விளைவுகள்- Message notes 👉🏿மத்தேயு 7:24  ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். மத்தேயு 7:26  நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். --கன்மலையின் மேல் கட்டிய வீடு-- --ம...

நன்றி என்று சொல்லுகின்றோம் நாதா - Songs Scales

Image
நன்றி என்று சொல்லுகிறோம்  F major  F   A    G  F   F  G    F      E      E   G நன்றி என்று சொல்லுகிறோம் நாதா E   F   G    A#  A      G    A G F நாவாலே துதிக்கிறோம்  நாதா A A#  A   G    G  A நன்றி இயேசு ராஜா G F E  A# A    G   F நன்றி இயேசு ராஜா பிதாவே ஆராதிக்கின்றோம் - Songs Scales நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் - songs scales C. C. C.C.C.   A C.C.C. A#C.A#A A# கடந்த நாட்கள்  காத்தீரே நன்றிராஜா G  G G  G    A# A#A# A G A G  F புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா

ஆண்டவரும் சாத்தானும் - Jokes

Image
   இரண்டு திருடர்கள் ஒரு கூடை நிறைய தோடம்பழங்களை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்கள். ஒரு அமைதியான இடத்துக்கு போய் இரண்டு பேரும் அதை பங்கு போட நினைத்தார்கள்.  பக்கத்தில் உள்ள சுடு காட்டிற்கு போவோம் என்று ஒருவன் சொன்னான். சுடுகாட்டின் கதவு பூட்டி இருந்தது கதவு ஏறி உள்ளே குதித்தார்கள்.அப்படி குதிக்கும் போது இரண்டு தோடம்பழம் கீழே விழுந்துவிட்டது. கூடையில் நிறைய பழங்கள் இருந்ததால் அதை அவர்கள் கவனிக்கவில்லை. கொஞ்ச நேரம் கழிந்து சுடுகாடு வழியாக ஒரு குடிகாரன் வந்தான். அவன் உள்ளே இருந்து வந்த சத்தத்தை கேட்டு அங்கேயே நின்றுவிட்டான்.  "உனக்கொன்று, எனக்கொன்று,  உனக்கொன்று,  எனக்கொன்று" மறுபடியும் பிறந்தவன் - Jokes எப்படிக் கணிப்பு - Jokes இதை கேட்ட அவனுக்கு குடி போதை போய்விட்டது. அடிச்சுப் பிரண்டு  பக்கத்திலே உள்ள ஆலயத்துக்கு ஓடினான் அங்கு இருந்த பழைய விசுவாசியிடம் விடயத்தை சொன்னான். "சகோதரனே தயவு செய்து என் கூட வாருங்கள் கடவுளும்,  சாத்தானும் சுடுகாட்டில் பிணங்களை பங்கு போடுவதை காட்டுகிறேன்" என்றார். அந்த பழைய விசுவாசிக்கு ஒன்ற...

பழிக்கு பழி வாங்காதிருப்பாயாக - Story

Image
ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு சென்றது. வேடன் அருகில் இருந்த ஓர் மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது.  புலி கரடியிடம் கூறியது  இவ்வேடன், நமது மிருக குலத்துக்கே பகைவன்; இவனைக் கீழே தள்ளி விடு என்றது. இருக்கலாம், ஆனால் இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான்.  சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கியது. சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறியது எனக்கு பசியாக இருக்கிறது.  நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன். கோபத்தின் விளைவுகள் - story வேடன் கரடியைத் தள்ளிவிட்டான், கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது. அப்போது புலி கரடியிடம் சொன்னது. இந்த மனிதன் நன்றிகெட்டவன் சரண் அடைந்தவனை காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான். அவனை இப்பொழுதே தள்ளிவிடு என்றது.  அதற்கு கரடி சொன்னது, எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக, நான் என் நல்நடத்தையை கைவ...

பரிசுத்தத்தை வாஞ்சிப்போம் - Quotes

Image
அசட்டையான சிறு வழிவிலகல்கள்  ஆபத்தின் உச்சியில் கொண்டு போய் விடலாம்  ஒருவரது பாவமான நடத்தை  மற்றவர்களையும் பாதிக்கும்  வாழ்வின் பிரதான நோக்கம் - Quotes  தேவ ஈவுகள் ஏராளம் - Quotes எனக்கு என்ன கிடைக்கின்றது என்பதை விட  என் மூலமாய் மற்றவர்களுக்கு என்ன  கிடைக்கின்றது என்பதே முக்கியம் 

எதன் அடிப்படையில் எமது கிரியைகள் - Message Notes

Image
யோவான்- 12:3  அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது. நாம் ஆலயம் செல்கின்றோம்.... தசம பாகம் கொடுக்கின்றோம்...... பாடல் பாடுகிறோம்... ஆராதிக்கின்றோம்... காணிக்கைகள் கொடுக்கின்றோம்.. நற்கிரியைகள் செய்கின்றோம்... இன்னும் பலவும் செய்கின்றோம்.. இவை எல்லாமே நல்லது தான் ஆனால் எதனை அடிப்படையாக வைத்து ஈடுபடுகின்றோம்... 👉🏿பிரதிபலனை எதிர்பார்த்து- எமக்கு நன்மைகள், ஆசீர்வாதங்கள், சுகம், செழிப்பு, இன்னும் வசதி வாய்ப்புக்கள் பெருக வேண்டும் என்பதற்காக.. உதாரணமாக பேதுரு கேட்டான் ஆண்டவரே எல்லாவற்றையும் விட்டு உம்மை பின்பற்றுகின்றோமே எமக்கு "என்ன கிடைக்கும்". 👉🏿பெருமை புகழ்ச்சிக்காக- தமது பெயர் புகழடையனும், தமக்கு ஓர் அந்தஸ்து, கௌரவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக உதாரணமாக பரிசேயனது ஜெபம்... 👉🏿பயத்தின் நிமித்தம்- குறிப்பிட்ட ஒன்றை செய்யாவிட்டால் வியாதி, நஷ்ரம், கஸ்ரம், ஆபத்து வந்து விடும் ...

பிதாவே ஆராதிக்கின்றோம் - Songs Scales

Image
பிதாவே ஆராதிக்கின்றோம்  F major                             F  G  A      A A   G G      F பிதாவே  ஆராதிக்கின்றோம்   G    A  A#     A# A# A#       A இயேசுவே   ஆர்ப்பரிக்கின்றோம்   C'  F FGA  G   A#A#    A   G     F ஆவியானவரே அன்பு செய்கின்றோம்   A  A    A#A#    C ஆராதிக்கின்றோம் G        A   A        A# ஆர்ப்பரிக்கின்றோம் A#A#       A   G        F அன்பு செய்கின்றோம் C'C'C'  A   A# C'   A# சகலமும்  படைத்தவரே A#A#   G   C'  A# A சர்வ       வல்லவரே A#A#A#A#      D' D'  C'    F  G மகிமைக்கு      பாத்திர்ரே-ஐயா A A A     ...

மறுபடியும் பிறந்தவன் - Jokes

Image
குடிகார கந்தசாமியை மூன்று முறை தண்ணீரில் அமுக்கி எடுத்துக் கொண்டு போதகர்  கூறினார். "உன்னுடைய பாவங்களெல்லாம் கழுவி  மாற்றப்பட்டது.இன்று நீ புதிதாக சுத்தமானவனாக பிறந்திருக்கிறாய்.இன்றுமுதல் நீ சாமுவேல் என்றழைக்கப்படுவாய். இனிமேல் குடிக்கமாட்டேன் என சத்தியம்  செய்துகொடு சாமுவேலே ". சத்தியம். டீ குடிக்கலாமா பாஸ்ரர்.??? எப்படி கணிப்பு - jokes தாராளமா எத்தனை தடவ வேணும்னாலும் குடிக்கலாம். ஓகே பாஸ்ரர். சாமுவேலான குடிகார கந்தசாமி தனது வீட்டிற்கு வந்தவுடன் அலமாரியில் இருந்து ஒரு புல் பாட்டில் ரம் எடுத்து தொட்டி நிறைய இருந்த தண்ணீருக்குள் மூன்றுமுறை அமுக்கி எடுத்துக்கொண்டு  கூறினான்.  " உன்னுடைய விஷங்களெல்லாம் கழுவி மாற்றப்பட்டது.நீ புதிதாக சுத்தமானதாக பிறந்திருக்கிறாய். இன்றுமுதல் நீ  " டீ " என்றழைக்கப்படுவாய்".

கோபத்தின் விளைவுகள் - Story

Image
ஒரு இளைஞன் அதிகமாக கோபங் கொள்பவனாய் இருந்தான். எதற்கெடுத்தாலும் பட்டென கோபங் கொள்வான். ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் ஓர் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்து "இனிமேல் உனக்கு கோபம்வரும் போது எல்லாம் வீட்டின் பின்னால் உள்ள ஓர் காய்ந்த மரத்தில் ஆணி அடிக்குமாறு கூறினார்”. முதல்நாள் பத்து ஆணி மறுநாள் ஏழு, பின்பு ஐந்து , இரண்டு  என படிப்படியாக ஆணி குறைந்து கொண்டே சென்றது. ஒரு நாள் ஒரே ஒரு ஆணி தான் அடித்தான் மற்றொரு நாள் எவ்வித ஆணியும் அடிக்கவில்லை. மொத்தமாக ஐம்பது ஆணிகள் வரை அடித்து இருந்தது. அவன் தன் அப்பாவிடம் "இனி கோபம் எனக்கு வராது எனகூறினான்". இனிமேல் கோபம் வராத நாளில் நீ ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார். சம்மதித்து கொண்டு சென்ற மகன் ஓர்நாள் தனது தந்தையிடம் "ஐம்பது அடித்த ஆணிகளும் பிடுங்கப்பட்டு விட்டன" என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான். உடனே அப்பா சொன்னார்; ஆணிகளை பிடுங்கிவிட்டாய் மரத்தில் உள்ள ஓட்டைகளை என்ன செய்வாய்? உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? கருத்து- கோபத்தின் விளைவுகள் பெரிதாக இருக்கும்.. தழும்புக...

வாழ்வின் பிரதான நோக்கம் - Quotes

Image
தேவனை பின்பற்றுவதே  எம் வாழ்வின் பிரதான நோக்கம்  ஒரு சிறு விடயத்தில் எடுக்கப்படும் தப்பான முடிவு மேலும் பல தப்புக்களுக்கு வழிவகுக்கலாம் மற்றைய quotes பார்க்க ஆண்டவர் பாவத்தில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்வார். சுயத்தில் இருந்து நம்மை நாமே விடுவிக்க வேண்டும்

இரட்சிப்பின் விளைவுகள் - Message Notes

Image
👉🏿நிஜ வாழ்க்கையில் காரியங்கள் மாற்றப்பட்டிருக்கும்-  >>வேத வாசிப்பு, ஜெபம், தியானம் காணப்படும் . >>பேச்சு, கிரியைகள் மாறியிருக்கும் >>தேவ பயம் , பக்தி இருக்கும் >>மற்றவர்களுடனான நடத்தை நன்றாய் இருக்கும்...... 👉🏿 வாழ்வின் சம்பவங்களை முதல் பார்த்தது போல பார்க்க முடியாது.  >>அன்றாடம் நிகழும் சம்பவங்கள் தேவனால் ஒழுங்கு படுத்தப்பட்டது. >>நன்றியுணர்வும், பரிசுத்தமாகுதலும், தேவனை கிட்டி சேரும் சிந்தையும் இருக்கும். நல்ல ஆவிக்குரிய வாழ்க்கைக்கு செய்யப்பட வேண்டியவை- Message Notes 👉🏿விருப்பங்கள் புதிதாகும் அல்லது அது தேவனை மையப்படுத்தும்.  >> ஆலயம் செல்ல வேண்டும் >> நற்கிரியைகள் செய்ய வேண்டும் >> சத்தியங்களை அறிய வேண்டும் >> அண்டவருக்காய் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் 👉🏿பழையவைகள் செயலிழக்கப் பட்டிருக்கும் .  >> பாவ காரியங்கள் >> மாம்சத்தின் கிரியைகள் ( பொல்லாத சிந்தனை , பொறாமை, களவு , விபச்சாரம்.............) உண்மையாய் நம்மை ஆராய்ந்து பார்த்து ஆண்டவரிடம் மனந்திரும்புவோம...

நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் - Song Scales

Image
          நேசரே உம் திரு                     E major                           E E   E    F#  EE   E E E   F#E  E நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் G#G#G#     F#E  E F# நிம்மதி          நிம்மதியே A A A G#F#   G#G# F#  E  D# ஆர்வமுடனே  பாடித் துதிப்பேன் F#F#F#         G#F#F#E ஆனந்தம்     ஆனந்தமே E   F#  G#   A    A G#F#G# அடைக்கலமே   அதிசயமே F#E D#  F#   F#G#F#E ஆராதனை   ஆராதனை இயேசு நல்லவர் . Song Scales E E   E         F#  EE   உம் வல்ல  செயல்கள்  E E E           F#E  E நினைத்து   நினைத்து G#G#G#     F#E  E    F# உள்ளமே    பொங்குதையா A A A G#...

எப்படி கணிப்பு - Jokes

Image
புதிதாக இராணுவ பயிற்சியை முடித்து வெளியேறிய அணியினருக்கு இறுதி நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது முதலில் அணிவகுப்பு நடை பெற்றுக் கொண்டிருந்தது. அவ் அணியில் ஜோன் என்பவனும் இடம் பெற்றிருந்தான். ஆகவே அவனது தாயும் தகப்பனும் நிகழ்வை பார்க்க வந்திருந்தார்கள். கூடவே ஏராளமானோர் கலந்திருந்தனர். எப்படி திறமை - Jokes அவ் அணிவகுப்பிலே ஜோனின் கால்கள் மாத்திரமே முறைதவறி ( left , right) சென்று கொண்டிருந்தது   அதனை அவதானித்த ஜோனின் தாய் அவளது கணவனை தோளில் தட்டி  "பாருங்கள், எல்லாரும் பிழையாய் செய்கின்றனர். ஜோன் மட்டும் தான் சரியாக செய்கின்றான்". என்றாளாம்.

விலையேறப்பெற்ற இரட்சிப்பு - Story

Image
ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான். அதன் மதிப்பு என்ன வென்று தெரியாமலே அதை தன்னுடன்இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம்சென்று இந்த கல்லை எனக்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன்; எவ்வளவு வேண்டும் கேள் என்றான். உடனே பிச்சைக்காரன் "அப்படி யானால் நூறு ரூபாய் தந்து விட்டு இந்தக் கல்லை வைத்துக் கொள்" என்றான். அதற்கு வைர வியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன்  "நூறு ரூபாய் அதிகம்! நான் உனக்கு ஐம்பது ரூபாய் தருகிறேன். இல்லை என்றால் வேண்டாம்" என்றான்.  பிச்சைக்காரன் "அப்படியானால் பரவாயில்லை, அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான். தப்பி ஓடிய யானை - Story வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை ஐம்பது ரூபாய்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான். அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான். இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி ...

தேவ ஈவுகள் ஏராளம் - Quotes

Image
ஆண்டவரிடம் இருந்து நாம் ஒன்றையும் சம்பாதிப்பதில்லை எல்லாமே இலவசமாகவே கிடைக்கின்றது. பொறாமை சிறுமைக்குள்ளாக்கும் பொறுமை பெறுமதியாக்கும் அகிலமே ஆண்டவருக்கு அரியணையாய் இருக்க  உன் சிறு இருதயத்தையே அரியணையாக்க விரும்புகிறார்.

இயேசு நல்லவர் - Song Scales

Image
            இயேசு நல்லவர்                         G major                                 G G G     B      A இயேசு   நல்லவர் A A A      C      B இயேசு   நல்லவர் B B B       D      C இயேசு   நல்லவர்   A  C  B      A A   G நல்லவர்   எனக்கு நேசரே உம் திரு - Song Scales

தப்பி ஓடிய யானை - Story

Image
குட்டியானை ஒன்று பாகன் வெட்டி   வைத்த குழியில் அகப்பட்டுக் கொண்டது .  அவன்   அதைக் கட்டி இழுத்துச் சென்று தன் வீட்டில் ஒரு தூணில் இரும்பு சங்கிலியால் கட்டி வைத்தான் . யானைக்குட்டி தன்னை விடுவித்துக் கொள்ள எவ்வளவோ   போராடிப் பார்த்தது .   ஆனால் , சங்கிலி அதன் காலை அறுத்துப் புண்ணாக்கி விட்டது .  பாகன் சிரித்தபடி சொன்னான் ,  " இனிமேல் நீ என் அடிமை .  உன்னால் தப்பவே முடியாது ". குட்டி யானைக்கு அவன் சொன்னது   உண்மையென்றே பட்டது .  தப்பிச் செல்லும்   முயற்சியைக் கைவிட்டு   அடிமை வாழ்வு வாழப் பழகியது . தினமும் பாகன்   அந்த சங்கிலியை சுட்டிக்காட்டி , " நீ   என்னுடைய அடிமை .  உன்னால் தப்பவே முடியாது " என்பதையே சொல்லி வந்தான் .  குட்டியும் அதை முழுமையாக நம்பியது .  நாட்கள்   ஓடின .  குட்டி வளர்ந்து பெரிய யானையானது . அப்போதும்   பாகன் அதே வார்த்தைகளை   தினமும் சொல்ல   அது இன்னும் அடிமையாகவே வாழ்ந்துவந்தது . தப...